2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

188 வயது முதியவர் குகையில் இருந்து மீட்பு

Mayu   / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு அருகே குகையொன்றிலிருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

இதற்கமைய, சமூக வளைத்தளங்களில் 188 வயதுடைய முதியவரின் காணொளி மற்றும் படங்கள் வேகமாகப் பரவிய போதிலும், அந்த முதியவரின் வயது பற்றி பலருக்கும் சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், உண்மையை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சியாரம் பாபா என்ற இந்து துறவி என்பதும், அவருக்கு 188 வயது ஆகவில்லை, சுமார் 110 வயது இருக்கும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் X தளமும் இது போலி செய்தி என்பதை தெரிவித்துள்ள்ளது. வைரலான அந்த வீடியோவின் கீழ், "இது தவறான தகவல்! அந்த முதியவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் சியாரம் பாபா என்ற இந்து துறவி ஆவார். அவரின் வயது 110 தான்" என்று தெரிவித்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .