2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

500 கிலோ கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முற்பட்டவர் கைது

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம்;

இராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த விருந்த ரூ.50 இலட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்து, 2பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அரியவகை கடல் அட்டைகளை பிடிக்க அரசாங்கம்  தடை விதித்துள்ளது. வனத்துறையினர் தேவிபட்டினம் கடற்கரை பகுதியான பெரிய கடை பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கோடவுனில் மருத்துவ பயன்பாட்டிற்காக கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணி நடந்தது. அது தொடர்பாக தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த இருவரைக்  கைது செய்து சிலிண்டர்கள், பாத்திரங்கள், அடுப்பு, உப்பு பாக்கெட் மற்றும் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 இலட்சம் வரை இருக்கும் என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .