2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உயிரை மாய்த்த வீரர்கள்; இஸ்ரோவில் பதற்றம்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில்,  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவ வீரர்கள் இருவர், தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி என்பவரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் சிங் என்பவருமே இவ்வாறு  அடுத்தடுத்து தமது உயிரை மாய்த்துக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் பணி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .