A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . இந்நிலையில் இந்த சிகிச்சை தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது .
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026