2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணியின் உயிரைப் பறித்த வெயில்

Ilango Bharathy   / 2023 மே 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கர்ப்பிணியொருவர் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்த சம்பவம்  மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 9 மாத கர்ப்பிணியான  இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அவர் வீட்டில் இருந்து கோடை வெயிலில் 7 கிலோமீற்றர்  தூரம் நடந்து வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது போது அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் அம்புலன்ஸ் மூலம் காசா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. விசாரணையில் 7 கி.மீ. வெயிலில் நடந்து சென்றுள்ளமையே அவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .