Ilango Bharathy / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைச்சர் ரோஜா குத்துச்சண்டை போடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் முன்னாள் நடிகை ரோஜா, கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்பு உடைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் விசாகப்பட்டினத்தில் தேசிய குத்துச்சண்டைப் போட்டியை ஆரம்பித்து வைத்த ரோஜா, கைகளில் கைக் கவசத்தினை அணிந்து கொண்டு, அங்கிருந்தவர்களுடன் குத்து சண்டையில் ஈடுபட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .