A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன் தங்கை பிரியங்கா வாத்ரா இல்லாமல் எந்த அரசியல் முடிவும் எடுப்பதில்லை. இது, தற்போது மீண்டும் நிருபணமாகிஉள்ளது.
கடந்த வாரம் பிரியங்கா தன் மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்க அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சமயத்தில் தான், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கும், சுகாதார துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவுக்கும் மோதல் முற்றியது. இருவரும் டெல்லியில் ராகுலை சந்தித்து பேசினர். இதில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பூபேஷ் பாஹேல், சத்தீஸ்கர் திரும்பி விட்டார். சிங் தியோ மட்டும் டெல்லியில் முகாமிட்டுஇருந்தார்.
இந்நிலையில் பிரியங்கா அமெரிக்காவில் இருந்து திரும்பிய உடன், டெல்லி வரும்படி பூபேஷ் பாகேலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. பிரியங்கா உடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கவே, சத்தீஸ்கர் விவகாரத்தை ராகுல் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.அடுத்து பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் விடுத்துஉள்ள மிரட்டலை சமாளிக்க, பிரியங்காவின் உதவி தான் ராகுலுக்கு தேவைப்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
24 minute ago
31 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
41 minute ago