2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தோப்புக்கரணம் போடுவதில் உலக சாதனை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்களான சுபாஷ் மற்றும் பரத் முறையே 8ஆம், 11ஆம் தரத்தில் படித்து வருகின்றனர்.

தோப்புக்கரணம் போடுவதில் உலகசாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்த இவர்கள்  அண்மையில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளனர்.

அந்தவகையில் சுபாஷ் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டும், பரத் கதிரையின் மேல் நின்று 93 முறை தோப்புக்கரணம் போட்டும் உலக சாதனை படைத்துள்ளனர். இச்சாதனையை  அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (Kalam's Book of Records) என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .