A.K.M. Ramzy / 2021 மார்ச் 11 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய சங்கத்தினர் போராட்டத்தை துவங்கி, 26 ஆம் திகதியுடன், நான்கு மாதங்கள் நிறைவடைகின்றன. அன்றைய தினம், காலை முதல் மாலை வரை, நாடு முழுவதும் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் நடத்தப்படும்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர், எதிர்வரும் 26ஆம் திகதி 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து, விவசாய சங்க தலைவர் புடா சிங், டில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பெற்றோல், டீசல் விலை உயர்வு மற்றும் ரயில்வே துறை தனியார் மயமாவதை எதிர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து, எதிர்வரும் 15ஆம் திகதி விவசாய சங்கத்தினர் பேராட்டம் நடத்தவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago