2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாக். பெண் உளவாளிக்கு தகவல் அளித்த வீரர் கைது

Freelancer   / 2022 மே 22 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராணுவப் பிரிவில் கடமையாற்றிவரும் இராணுவ வீரர்,  பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார். 

கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி இவரிடம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
அந்த பெண்ணிடமிருந்து இந்த இராணுவ வீரருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. புதுடெல்லியில் சந்தித்துப் பேசலாம் என்பதுடன், காதலையும் வெளிப்படுத்திய அந்தப் பெண், , திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகக் கூறியும் முக்கியத் தகவல்களை  பெற்றுள்ளார் எனத் தெரியவருகின்றது. 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .