Ilango Bharathy / 2023 மார்ச் 19 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தில் ஒடும் ரயிலில் பெண் பயணியொருவர் மீது, பயணச்சீட்டுப் பரிசோதகர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து கியூல் நோக்கிப் பயணித்த புகையிரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்த பயணச்சீட்டுப் பரிசோதகரான முன்னா குமார் என்பவர், குறித்த ரயிலில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டதையடுத்து, சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரை சிறைப்பிடி சார்பஹ் ரயில் நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இதனையடுத்து முன்னாவைக் கைது செய்து, பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
01 May 2026