Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 27 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் அரச வேலைகளில் மட்டும் ஈடுபடாமல் வணிகத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது மட்டுமின்றி, இளைஞர்களும் தற்போது தங்கள் தொழிலில் புதிய மற்றும் புதுமையான யோசனைகளை புகுத்தி தங்கள் தொழிலை தனித்துவமாக்க முயற்சிக்கின்றனர்.
முன்பெல்லாம் சிறுவயது ஆண்களுக்கு மட்டுமே வியாபாரம் என்று இருந்த நிலையில், இப்போது இளம் பெண்களும் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பல பெண் தொழில்முனைவோர் உருவாகியுள்ளதுடன், அவர்கள் உள்ளூர் மற்றும் தேசிய அளவில் அதிக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
பூ வடிவ சொக்லேட் தயாரிக்கும் ஸ்ரீநகரைச் சேர்ந்த அஃப்ஷானா பெரோஸ் கான் (வயது 25) இதற்கு சிறந்த உதாரணம்.
அஃப்ஷானாவின் பூ வடிவ சொக்லேட்டுகள் சந்தையில் மிகவும் தனித்துவமானவை, இதை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்குகின்றனர்.
சந்தையில் உள்ள இந்த வகையான சொக்லேட்டுகள், அஃப்ஷானாவை காஷ்மீரில் பூ வடிவ சொக்லேட்டுகளை தயாரிக்கும் முதல் பெண் தொழிலதிபராக உருவாக்கியுள்ளன.
ஸ்ரீநகரில் உள்ள நிஷாத் பகுதியை சேர்ந்த அஃப்ஷானா, விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார், ஆனால் வித்தியாசமான சமையல் குறிப்புகளை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வம், தனித்துவமான சொக்லேட்டுகளை உருவாக்க வழிவகுத்தது.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அஃப்ஷானா, “இந்தப் பணியைத் தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல, ஆனால், பெற்றோரின் தைரியத்தாலும், ஆதரவாலும் என்னால் இதைச் செய்ய முடிந்தது” என்றார்.
பெரிய அல்லது சிறிய பூ வடிவிலான அல்லது வேறு வகையான சொக்லேட் தயாரிப்பதில் அஃப்ஷானா நிபுணத்துவம் பெற்றவர்.
“எங்கிருந்தும் பூ வடிவ சொக்லேட் தயாரிப்பது எப்படி என்று நான் கற்றுக் கொள்ளவில்லை. எனது திறமையை மேம்படுத்தவும் நிபுணத்துவத்தைப் பெறவும் யூடியூப் வீடியோக்களின் உதவியைப் பெற்றேன்” என்று அவர் கூறினார்.
அஃப்ஷானா தனது சொக்லேட் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கி இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை என்றபோதும், அவரது சொக்லேட்டுகள் கவர்ச்சிகரமான செய்முறை மற்றும் தனித்துவமான சுவை காரணமாக மக்களால் விரும்பப்படுகின்றன.
“எனது பூ வடிவ சொக்லேட்டுகளை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். திருமணங்கள், பிறந்தநாள் மற்றும் ஏனைய சிறப்பு நிகழ்வுகளில் இது இன்னும் பிரபலமாக உள்ளது, ”என்று அவர் கூறினார்.
அஃப்ஷானா தனது வீட்டில் ஒரு சிறிய அறையில் இருந்து தனது குழந்தைகளுக்கு பிரத்தியேக வகுப்பு அளித்து சம்பாதித்த பணத்தில் தனது தொழிலைத் தொடங்கினார். இன்று அஃப்ஷானா தனது தொழிலில் நல்ல இலாபம் சம்பாதிக்கிறார்.
அரச வேலை தேடி நேரத்தை வீணடிக்காமல், தனக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தன் திறமையை பயன்படுத்தி சுயதொழிலில் கவனம் செலுத்துவது நல்லது என்றார் அஃப்ஷானா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
23 Apr 2024