2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து சாரை சாரையாக வந்த இலட்சக் கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று ஞாயிற்றுக்கிழமை  முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

 கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் (வயது 46). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

  புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

  இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய  நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

 

 

 

  

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .