A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

மும்பை
தங்களைப் பற்றி பொய் புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தபொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்தது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர்,பிணை பெற்று விடுதலையானார்.
இதற்கிடையே மும்பையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது, மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் அளித்தார்.
அதில் தம்பதியினர் மீது மோசடி, மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.
இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ராவுக்கு ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் தரப்பில் வக்கீல் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026