2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விருந்தால் 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 02 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவில் ஞானஸ்நான நிகழ்வில் கலந்துகொண்டு உணவருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில்  கடந்த 29ஆம் திகதி ஞானஸ்நான  நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை உட்கொண்ட 100க்கும் மேற்பட்டோர், உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பழுதடைந்த உணவு வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  அந்நிகழ்வுக்கு உணவு விநியோகம் செய்த உணவகத்தின் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .