2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 30 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திருப்பூர்

''ராசாவை பின்னால் இருந்து ஸ்டாலின் பேச வைக்கி றார்.உடனடியாக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு, தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.முதல்வரின் தாயாரை அவதூறு பேசிய ராசாவை, பின்னால் இருந்து ஸ்டாலின் இயக்குகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்  மாநில தலைவர் முருகன் அளித்த பேட்டியில்:

 முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாயாரை கொச்சைப்படுத்தி பேசிய, ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் மீது இதுவரை, ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .