2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (13.05.2014)

A.P.Mathan   / 2014 மே 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (13.05.2014)

மேடம்
திருடர்களினால் பயம் உண்டாகும். இதனால் வீணான சிரமங்கள் காணப்படும். உடலில் மயக்கம் உண்டாகும்.
அஸ்வினி: சிரமங்கள்
பரணி: மயக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்


இடபம்
உடல் நிலையில் தொய்வு காணப்படும். மனதில் சில குழப்பமான சூழ்நிலை உருவாகும். துக்கம் நிலவும்.
கிருத்திகை 2, 3, 4: துக்கம்
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சங்கீதத்தில் ஆர்வம் உண்டாகும், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் மனதளவில் கஷ்டங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: முயற்சி


கடகம்
வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். மனதில் பயம் காணப்படும். உடலில் சோர்வு காணப்பட்டு தலைவலி, மயக்கம் ஆகியவை காணப்படும்.
புனர்பூசம்: பயம்
பூசம் : துன்பம்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
சில வேண்டாத பேச்சுக்களால் மனம் சஞ்சலம் அடையும். இதனால் பிரச்சினைகள் வரக்கூடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத செலவுகள் கூட உண்டாகும்.
மகம்: துன்பம்
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிகாரிகளின் பேட்டிகள் கிடைக்கப்பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். அப்பொழுது கவனத்துடன் இருப்பது அவசியம். தொழில் நிமிர்த்தமாக பிரயாணம் செல்லுதல், இதனால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: லாபம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி


விருட்சிகம்
வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வேலையில் உயர்பதவியில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வயிற்றில் வலி தோன்றி மறையும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை: பிரச்சினை


தனுசு
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். வீணான அலைச்சல்கள் காணப்படும். செய்யும் செயல்களில் சில பல தவறுகள் உண்டாகும், எனவே கவனத்துடன் பணிபுரிவது அவசியம். முயற்சிகள் தோல்வியடையும்.
மூலம்: அலைச்சல்
பூராடம்: தவறுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்


மகரம்
நல்ல நண்பர்களின் சேர்க்கைகளினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இருந்த போதிலும் மனதளவில் அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்


கும்பம்
இல்லத்தில் உள்ள பெண்கள் மூலம் மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வேறு இடமாற்றம் மனதில் மாறுதல்களை உண்டாக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும், இதனால் மனது மகிழ்ச்சியடையும். முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். அதிக பண லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .