2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

18 பேரைத் தாக்கிய அணிலுக்கு மரண தண்டனை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாம்பல் நிற அணிலொன்று 2 நாட்களில்  18 பேரைக் தாக்கிய சம்பவம் அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் பக்லி என்ற பகுதியில் உள்ள, ஸ்ட்ரைப்’ என அழைக்கப்படும் அணிலொன்றே இவ்வாறு 18 பேரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகையான சாம்பல் நிற அணிகள் மிகவும் ஆக்ரோஷமானவை என அந்நாட்டின் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த அணிலின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில்  பதிவேற்றிய நிலையில் அப் புகைப்படங்கள் வைரலானது.

இதனையடுத்து அப்பகுதி மக்களின் நலன் கருதி  குறித்த அணில்    கால் நடை மருத்துவர் ஒருவரினால் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .