2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

31 பேகர்களை ஓடர் செய்த 2 வயதுக் குழந்தை

Ilango Bharathy   / 2022 மே 19 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 வயதுக் குழந்தையொன்று  தாய்க்குத் தெரியாமல் 31 சீஸ் பேர்கர்களை( Cheese burgers) ஓடர் செய்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன் இவரின்  2 வயதான மகனான   பார்ரெட்டே இவ்வாறு 31 பேகர்களை ஓடர்  செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்  தினத்தன்று அக்குழந்தை  தாயின் தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதன்போது எதிர் பாராத விதமாக உணவு ஓடர் செய்யும் அப் (App) மூலம் மெக்டொனால்ஸ் கடையில் 31 சீஸ் பேகர்களை  அக் குழந்ததை ஓர்டர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறிதுநேரத்தில் 31 சீஸ் பேர்கர்களுடன் ஊழியர் கெல்சி வீட்டுக்கு வந்தார் எனவும் இதனால் திகைத்த அவர் அவரது குழந்தையிடம் பொலைபேசியை வாங்கிப் பார்த்த போது அதில் அக்குழந்தை 31 பேர்கர்களை ஓடர் செய்துள்ளமையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மகன் மீது தனது  கோபத்தை காட்டாமல் அந்த பேகர்களை மற்றவர்களுக்கு வழங்க முடிவு செய்தார் எனவும் இதையடுத்து பேஸ்புக் பக்கத்தில், என்னிடம் 31 சீஸ் பேகர்கள் இருக்கிறன.

யாருக்கு விருப்பம் இருந்தால் இலவசமாக தருகிறேன். எனது 2 வயது மகன் எப்படி ஓர்டர் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறான் என்று ” பதிவிட்டுள்ளார்.


இதனையடுத்து அவரது வீட்டுக்கு பவர் வந்து குறித் பேகர்களை வங்கிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X