2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்

Freelancer   / 2026 ஏப்ரல் 03 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்​துக்கு இடையே நேற்று 34 ஆவது நாளாக போர் நீடித்​தது. ஈரான் முன்னாள் வெளி​யுறவு அமைச்​சர் கமல்கராஸி (வயது 81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தார்.

இந்த பேச்சுவார்த்தையில் முன்​னேற்​றம் ஏற்​படும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. இந்த சூழலில் ஈரான் மீதான தாக்​குதல்​களை அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் நேற்​றுமுன்​தினம் தீவிரப்​படுத்​தின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸி​யின் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்​ளது.

இதில் அவர் படு​கா​யம் அடைந்​தார். அவரது குடும்ப உறுப்​பினர்கள் உயி​ரிழந்​துள்ளார். தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. அமெரிக்காவுடன் அமைதிப் பேச்​சுவார்த்தை நடத்​திய ஈரான் மூத்த தலை​வரின் வீட்டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டிருப்​பது பெரும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

தொழிற்சாலைகள் மீது குறிமேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அரு​கே​யுள்ள தொழிற்​சாலைகளை குறி வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தின. இதற்கு பதிலடி​யாக மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்​களை குறி வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தியது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .