Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பாக, அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே-இன் திட்டத்தை எதிர்த்து, மேலும் பல அமைச்சர்கள் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெக்சிற்றுக்கு ஆதரவான அமைச்சர்கள் சிலர், பிரதமரின் திட்டத்தை எதிர்த்து, ஏற்கெனவே விலகியிருந்தனர்.
இந்நிலையில், பிரெக்சிற்றுக்கு எதிராகச் செயற்பட்ட கனிஷ்ட அமைச்சரான ஜோ ஜோன்ஸன், கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகியிருந்தார். அத்தோடு, பிரெக்சிற்றுக்கு எதிராகச் செயற்பட்ட மேலும் 4 அமைச்சர்களாவது, பிரதமரின் செயற்பாடுகளுக்கு எதிராகப் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, பிரெக்சிற் தொடர்பாகப் பிரதமரின் திட்டங்களுக்கு புதிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
12 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago