2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

காதலனின் விந்தணுவை சிரஞ்சில் எடுத்து சென்ற காதலி

Editorial   / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கள்ளக்காதலால் ஏற்பட்ட பழிவாங்கல், ஒரு தந்தையை தவறான குற்றச்சாட்டில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளதாக்கியது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் (கோஸ்டா ரிக்கா பகுதி) நடந்த ஒரு குடும்ப சதி, நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆனால், திடீர் திருப்பத்தில் உண்மை வெளியானது – கொலை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணின் உடலில் கண்டெடுக்கப்பட்ட DNA ஆதாரம், தந்தையின் விந்து மாதிரியால் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு, லூசியானா என்ற பெண் தனது திருமணமான நிக்கோலஸுடன் படுக்கையறை சம்பந்தமான கருத்து வேறுபாடுகளால் விரைவில் விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியின் துரித உணவுகள் கடை உரிமையாளர் டேவிட் என்பவருடன் அவருக்கு காதல் பிறந்தது. நட்பிலிருந்து கள்ளக்காதலாக மாறிய இந்த உறவில், டேவிட் தனது குடும்பத்தை (மனைவி, 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன்) விட்டு பிரிய மறுத்தார்.

"நீ ஏற்கனவே உடல் சம்பந்தமான காரணத்தால் விவாகரத்து பெற்றவள். என் குடும்பத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.இந்த மறுப்பால் புண்பட்ட லூசியானா, பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு கொடூர சதியைத் திட்டமிட்டார். 2023 மார்ச் மாதம், டேவிட்டின் 19 வயது மகள் கொலை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், பாலியல் வன்முறைக்கான DNA மாதிரி டேவிட்டுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். "எனக்கு எதுவும் தெரியாது. இது திட்டமிட்ட சதி," என்று அவர் நீதிமன்றத்தில் கதறினார். ஆனால், மருத்துவ ஆதாரத்தால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.சிறையில், டேவிட் தனது மனைவியிடம் தனது கள்ளத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். "மகளின் உடலில் என் DNA இருந்தது என்பதே எனக்கு அதிர்ச்சி," என்று அவர் அழுதார்.

நாட்கள் கடந்து, 2025 ஜூலை மாதம், டேவிட் தனது வழக்கறிஞரிடம் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்தார்: "லூசியானாவுடன் நெருக்கமாக இருந்தபோது, அவர் கழிவறைக்குச் சென்று திரும்பியபோது, அவரிடம் ஒரு சிரஞ் இருந்தது. 'பெண்களுக்கான மருந்து' என்று சொன்னார். 

இப்போது சந்தேகம் – என் உயிரணுக்களைத் திருடி, என் மகளை கொன்று என்னை சிக்க வைத்திருக்கலாம்."இந்தத் தகவல் காவல்துறையை அதிரச் செய்தது. தீவிர விசாரணையில், லூசியானா தனது கூட்டாளிகளை (இருவர்) ஏவி டேவிட்டின் மகளைப் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

சதியின் உச்சம்: லூசியானா, டேவிட்டுடன் இருந்தபோது சிரஞ்சு மூலம் அவரது விந்து மாதிரியைத் திருடி, கொலை செய்யப்பட்ட மகளின் உடலில் (தனி உறுப்புகளில்) ஊசி மூலம் செலுத்தினார்.

இதன் மூலம் பிரேத பரிசோதனையில் DNA பொருத்தம் ஏற்படச் செய்து, டேவிட்டை குற்றவாளியாக்கினார். "பழிவாங்கல் மட்டுமல்ல, அவரது மனைவியையும் துன்புறுத்த விரும்பினேன்," என்று விசாரணையில் லூசியானா ஒப்புக்கொண்டார்.

இதன் விளைவாக, லூசியானா மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிரபராதியாக அறிவிக்கப்பட்ட டேவிட், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டது: "அந்த நாள் நினைவுக்கு வராமல் இருந்திருந்தால், நான் 30 ஆண்டுகள் சிறையில் இருந்திருப்பேன். என் தவறால் குடும்பத்திற்கு துரோகம் செய்தேன். 

என் மகளின் மரணத்திற்கு நான் காரணம். இந்த அவமானம் எனக்கு கிடைத்தது." இந்தப் பதிவு, லட்சக்கணக்கானோரை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம், அமெரிக்காவின் சமூக வலைதளங்களையும் ஊடகங்களையும் ஆக்கபூஜை செய்துள்ளது. "காதலின் இருண்ட முகம்" என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரிகள், "இது DNA சதியின் மிகப்பெரிய உதாரணம்," என்று தெரிவித்துள்ளனர். லூசியானா மீதான வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தக் குடும்ப சோகம், பழிவாங்கலின் விளைவுகளைப் பாடமாகக் காட்டுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X