Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 11 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜம்முகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காஷ்மீரின் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி சதீஷ் ஷர்மா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்தியா - பாகிஸ்தான் மோதலை தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உணவு தானியங்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தட்டுப்பாடும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
“எல்லா விநியோக முனையங்களிலும் தேவையான அளவில் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போதைய நிலைமையை கண்காணித்து, தடையற்ற வினியோகம் நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே மக்கள் அமைதி மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
11 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago