Ilango Bharathy / 2022 ஜனவரி 07 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும் அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago