Editorial / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட சீனாவில் உள்ள ஓர் உயிர்த்தொழில்நுட்பத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் எட்டு பேர் மாண்டனர்.
வெடிப்பில் ஒருவர் காணாமல்போனதாக இதற்குமுன்னர் தகவல் வெளியானது. ஆனால் அவரும் மாண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தொழிற்சாலையின் சட்டப் பிரதிநிதி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொழிற்சாலையில் துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன.
வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்க்க முடிவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்னர் கடந்த ஜனவரி மாதம் அண்டை மாநிலமொன்றில் உள்ள எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 9 பேர் மாண்டனர்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago