2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சீனாவிடம் மீண்டும் வியட்நாம் விடுத்துள்ள கோரிக்கை

Freelancer   / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ப்ராட்லி தீவுகள் மீதான அதன் சட்ட மற்றும் மறுக்கமுடியாத இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய வியட்நாம், சீன இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரியது.

ட்ரூங் சாவின் (ஸ்ப்ராட்லி தீவுகள்) ஒரு பகுதியாக இருக்கும் சில நிறுவனங்களில் சீனாவின் இராணுவமயமாக்கலை வலுப்படுத்துவது மற்றும் வியட்நாமின் இறையாண்மையை மீறுவதானது, பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
வியட்நாமின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கவும் இராணுவமயமாக்கலை நிறுத்தவும், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகவும் சீனாவிடம் கேட்டுக்கொள்வதாக வியட்னாம் வெளியுறவு அமைச்சின் பிரதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
தென் சீனக் கடலில் சீனா கட்டியுள்ள பல தீவுகளில் குறைந்தது மூன்று தீவுகளை முழுமையாக இராணுவமயமாக்கி, அவற்றில் கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளுடன் பலப்படுத்தியுள்ளதாக ஏபி தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் தீவுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்த வியட்நாம் முழு சட்ட அடிப்படைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் கொண்டுள்ளது.

மேலும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட மாநாட்டின்படி நீர் மீதான அதன் இறையாண்மை உரிமைகள் மற்றும் அதிகார வரம்பு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.  

மார்ச் 19 முதல் ஏப்ரல் 9 வரை தென் சீனக் கடலில் புதிய பயிற்சிகளை சீனா அறிவித்தமை தொடர்பில், வியட்நாமின் நிலைப்பாடு மார்ச் 7 அன்று தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .