2025 ஜூன் 14, சனிக்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Freelancer   / 2025 ஜூன் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொலம்பியாவில், ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே (வயது 39) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. 

அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .