2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தார் உருகியதால் விமான சேவைகள் இரத்து

Ilango Bharathy   / 2022 ஜூலை 19 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் அண்மைக் காலமாகக்  கடுமையான  வெப்பநிலை நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டு மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் லண்டனில் விமான ஓடுபாதையின் தார் உருகும் அளவுக்கு உச்சபட்ச வெப்பம் நிலவியதால் லூடன் விமான நிலையத்தில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஓடுபாதையில்  தரையிறங்க வேண்டிய விமானங்கள் பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர்  லூடன் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .