2026 மே 14, வியாழக்கிழமை

பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்குமாறு கோரிக்கை

Freelancer   / 2022 ஜனவரி 05 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பீஜிங் ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியாகப் புறக்கணிக்குமாறு பெல்ஜிய சிவில் சமூகக் குழு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங்கில் தொடங்குவதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய விளையாட்டுகளில் தூதர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஈயூ டுடே தெரிவித்துள்ளது.

சீனாவில் அதிகரித்துவரும் வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் புறக்கணிப்பை அறிவித்த போதிலும், ஐரோப்பிய பாராளுமன்றம் ஆதரவாக வாக்களித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
   
ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விளையாட்டுகளைப் புறக்கணிக்கக் கோரியும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் திபெத்திய மற்றும் உய்குர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு பெல்ஜிய சிவில் சமூகக் குழுக்கள் தெருக்களில் இறங்கும் என்று ஈயூ டுடே தெரிவித்துள்ளது.

மறுகல்வி முகாம்கள் என்று அழைக்கப்படுபவற்றில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இனச் சுத்திகரிப்பினால் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவிகளுக்கும் இது ஒற்றுமையின் செய்தியை அனுப்பும் என்றும் 21 ஆம் நூற்றாண்டில் இந்த மனித உரிமை மீறல்களுக்கு சாட்சியாக இருப்பது மனிதகுலத்துக்கு அவமானம் என்றும் மானெல் மசல்மி கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .