2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெகாசஸ் ‘ தாக்குதலுக்குள்ளான ஸ்பெயின் பிரதமர்

Ilango Bharathy   / 2022 மே 03 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ்  (Pedro Sánchez) மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்  மார்கரிட்ட ரொபெல்ஸ்(Margarita Robles) ஆகியோரின் தொலைபேசிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  வெளியிடப்பட்ட அறிக்கையில் ”ஸ்பெயின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரின்  தொலைபேசிகள்  பெகாசஸ்(Pegasus) எனப்படும்  உளவு மென்பொருள் மூலம் கடந்த வருடம் பாதிக்கப்பட்டன.

இப் பெகாசஸ் மென்பொருள் அரசாங்க நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்காத நிலையில் யாரோ மூன்றாம் நபர் அவர்களின் தொலைபேசிகளை உளவு பார்க்க முயற்சித்துள்ளனர்.

இந்த உளவு நடவடிக்கையை நாட்டின் வெளியில் இருந்து யாரோ மேற்கொண்டுள்ளனர்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .