2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் 29 நாய்கள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 25 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


கத்தாரின் தலைநகரமான டோஹோவில்  இயங்கி வரும் விலங்குகள் மீட்பு மையமொன்றுக்குள் அண்மையில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இருவர்  அங்கிருந்த சுமார் 29 நாய்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தம்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் ” தங்களது மகன்களை குறித்த விலங்கு மீட்பு மையத்தில் இருந்த  நாய்கள் கடித்ததால் ஆத்திரமடைந்த  இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு மிருகங்கள் நல அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு . இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .