Freelancer / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்பிரிக்கா நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மை காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த மாதம் 21ஆம் திகதியன்று, வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், தொடங்கிய ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையை அடுத்து, இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக, அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026