2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீண்டும் அதிர்ந்தது துருக்கி

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின்  Nigde மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. 

இதனிடையே,  துருக்கி மற்றும் சிரியாவில் பெப்ரவரி 6 ஆம் திகதி 7.8 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில்  20 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரியாவில் 8.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  ஐ.நா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5,30,000-க்கும் அதிகமானோர் துருக்கியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .