2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கட்டை இறுக்கி பயன்படுத்தப்படும் உபகரணங்கள்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், அதனைக் கட்டை இறுக்கி பயன்படுத்தி போட்டிகளை நடத்தி விநோதம் அண்மையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.

கோலூன்றிப் பாய்தல் தான், தேசிய விளையாட்டுப் போட்டியில் வடக்குக்கு பல பதக்கங்களை அள்ளி வருகின்றது. இவ்வாறானதொரு போட்டிக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் வட மாகாணத்தில் இல்லாதிருப்பது, பெரும் கவலைக்குரியதாகவுள்ளது.

கோலூன்றிப் பாய்தல் போட்டிதான், ஜெகதீஸ்வரன் அனித்தா, நெப்தலி ஜொய்சன், ரி. புவிதரன், நவநீதன், தனுஜா, பவித்திரா, டன்சிகா, நிலானி, ஹெரீனா, டிலக்சன். றிசோத், அன்ரனி பிரசாத், பவிள்சன், டினேஸ், சியானாஸ், வினுசன், என பல தேசிய சாதனை வீரர்களை அடையாளம் காட்டியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .