R.Tharaniya / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 05 ) அன்று குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் கழக தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் முதலிடத்தையும் , குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும் , பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



9 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2026