2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 05 ) அன்று  குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் கழக தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் முதலிடத்தையும் , குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கலந்து சிறப்பித்தார். 

இதன் போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும் , பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .