2025 ஜூன் 16, திங்கட்கிழமை

4,450 போதைக் குளிசைகளுடன் இருவர் கைது

Janu   / 2025 ஜூன் 05 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவ பகுதியில் , 4450 போதைக் குளிசைகளை காரில் ஏற்றிச் சென்ற  இரண்டு சந்தேக நபர்கள், புதன்கிழமை (04) அன்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிபத்கொடை , கந்தான பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சீதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .