Mayu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்பதியினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 18 வயதுடைய மனைவியை கத்தியால் குத்தியதில் மனைவி ஆபத்தாக நிலையில் வைத்தியசாலையில் சிக்கிசை பெற்ற வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெனகல்லந்த மடபெத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை (03) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுடுவத்துராரகம கும்புக்கன அருகில் வசிக்கும் 30 வயதுடைய சந்தேகநபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமனசிறி குணதிலக்க
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago