2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

Janu   / 2024 மார்ச் 07 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - உடப்பு பகுதியில் நபர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் - உடப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X