2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஜஸ் கொடுத்தவரும் வாங்கியவர்களும் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ பகுதியில் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ்  போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டதாக  கூறப்படும் இரு சந்தேக நபர்களும் அவற்றை வாங்க வந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ எகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, கடத்தலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐஸ் விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எகொட உயனே பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடையவர்கள், மற்றைய மூவரும் அம்பலாங்கொட மற்றும் பலபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X