2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

டிப்பரின் வேகத்தால் வீதியில் நின்ற இளைஞன் பலி

Janu   / 2024 மார்ச் 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹலாவத்தை - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை ஏற்றிக்கொண்டிருந்த  இளைஞன் ஒருவர் மீது  தென்னை நெல் நாற்றுகளை ஏற்றிச் சென்ற பாரிய டிப்பர்  ஒன்று  மோதி  இளைஞன் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்  திங்கட்கிழமை  (11) இடம்பெற்றுள்ளது .

ஹலாவத்தை , திகன்வெவ, மொரக்கலே பகுதியைச் சேர்ந்த ஜனிது தனஞ்சய என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த  இளைஞன் சிறிய பேக்ஹோ இயந்திரமொன்றை தனது தந்தையின்  உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த போது , ​​உழவு இயந்திரத்தில் எரிபொருள் தீர்ந்துள்ளதுடன்  எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது, ​​அதிவேகமாக வந்த டிப்பர்  வாகனம் திடீரென வீதியை  விட்டு  விலகி இளைஞன் மீது  கவீழ்ந்துள்ளது

விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும் , டிப்பரின் முன் சக்கரங்கள் இளைஞனின் மார்பில் சிக்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X