Janu / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (09) அன்று புத்தளம் விஜயகடுபொத, 61ம் மைல் கல்லின் வீதித் தடுப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 542 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 01 கெப் வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (09) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வீதியில் பயணித்த கெப் வண்டி சோதனையிடப்பட்டதுடன் அதில் இருந்தே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் 22 மற்றும் 24 வயதுடைய புத்தளம், ஏத்தாளை மற்றும் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள், கெப் மற்றும் பீடி இலைகளின் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள விசேட பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எம்.யூ.எம்.சனூன்

13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025