R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் ஹாமித் புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சேர்ந்து கடந்த புதன்கிழமை (23) கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வின் போது, காஸா மக்களுக்காக 300,000 ரூபாய் பணம் தூதரகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இப்பணம் கடந்த ரமழானில் ஹாமித் எகடமி மாணவர்கள் தம்மால் முடியுமான பணத்தை காஸா சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நன்நோக்குடன் சிறுக சிறுக சேமிக்கப்பட்ட பணமாகும்.
ஹாமித் அகடமியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ஷெய்க் எம்.எச்.எம். இஹ்ஸான் (நவவி) மூலம், இந்த சந்திப்பின் நினைவாக தூதுவர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு மாணவர்களுக்கு சமூகப் பொறுப்பை உணர்த்தும் முக்கிய அனுபவமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வு மாணவர்களுக்கு சமூகப் பொறுப்பை உணர்த்தும் முக்கிய அனுபவமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்





15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026