Mayu / 2024 ஜூன் 06 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி – யாழ்ப்பாணம் ஏ – 09 வீதியில் அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்துக்குள்ளானதில் இரு வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை (05) இரவு இடம் பெற்ற இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், வர்த்த்க நிலையங்கள் சேதமடைந்துள்ளதுடன் வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்னறமை குறிப்பிடத்தக்கது.
ஆஸிக்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .