2024 மே 08, புதன்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் இருவர் சிக்கினர்

Mayu   / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை ஹகுருவெல கும்புக்முல்ல பிரதேசத்தில் 18 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பாபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வீரகட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 02,  ரூபா 5000 நாணயத்தாள்கள், 10, ரூபா 1000 நாணயத்தாள்கள் மற்றும் 06, ரூபா 500 நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேகநபர்கள் இட்டதெமலிய, ஹிகுருமுலன பிரதேசம் மற்றும் திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 39 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் சந்தேக நபர்களில் ஒருவர் மற்றைய சந்தேக நபரின் மனைவியின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X