Editorial / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தமிழ் மொழி மூலம் இயங்கிவரும் மகளிர் அமைப்புகளை இனங் கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடவடிக்கை எடுக்க உள்ளது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவிக்கிறார்
இதுகுறித்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் வாழும் பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் அமைப்புகளை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு இயங்கிவரும் அமைப்புகள் தமக்குள் தொடர்பாடல்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் ஒருங்கிணைந்த செயற்பணிகளை முன்னெடுக்கலாம் என நம்புகிறோம்.
எனவே, இவ்வாறு இயங்கும் அமைப்பு கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் தர புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இல.53.சங்கமித்த மாவத்தை , கொழும்பு-13 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவும் 075 4880172 என்ற வாட்சப் இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago