2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மாசி மஹோற்சவம் ; விஷேட பாதுகாப்பு ஏற்பாடு

Mithuna   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னனோனுக்கும் மேற்படி தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் பி.தருவானந்தா தலைமையிலான ஏற்பாடு குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சருக்கும் தேவஸ்தான அறங்காவலர் சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இம்முறை நடைபெற உள்ள மஹோற்சவத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டுக் குழுவினரால் எதிர்பார்க்கப்படுவதால் எவ்வித தடைகளும் இன்றி பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது  தொடர்பிலும் விசேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. விஷேடமாக இராணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X