2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மாமனாரை கொலை செய்த மருமகன்

Janu   / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருமகனால் தனது மாமனாரைத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் களனி பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய  எ.எ.ரி.சிறிசேன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டில் வைத்தே சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இவர் பலமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே உயிரிழந்தவரின் மருமகனான 65 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X