2024 மே 16, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி , ஒருவர் காயம்

Janu   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அநுராதபுரம்,  ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் வைத்து தனியார் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில்  ஒருவர் உயிரிழந்து , மேலும்  ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது . 

அநுராதபுரம், பண்டுலுகம பகுதியைச் சேர்ந்த கே.எம்.சமிந்த லால் ( வயது 43) என்ற  நபரே இவ் விபத்தில்  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .