2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

'ஒரு பூ மீண்டும் மலர்கின்றது' நாவல் வெளியீடு

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. பஸீர் எழுதிய  “ஒரு பூ மீண்டும் மலர்கின்றது” நாவல் வெளியீடு எதிர்வரும் 19 ஆம் திகதி 5 மணிக்கு தெமட்டகொடை வீதி, இல-10இல் உள்ள வை.எம்.ஏம்.ஏ.கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூலின் நயவுரையை அஷ்ரப் சிஹாப்தீன், வாழ்த்துரையை முஸ்டீன், அறிமுகவுரையை டொக்டர் சனூஜ் காரியப்பர் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

நூலின் முதற் பிரதியை தேசமான்ய துர்கையூம் பெறவுள்ளார். இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக ஏ.என்.ஏ.ஹபீர், எம்.எல்.எம்.இஸ்மாயில், எஸ்.எல்.எம்.ஹபீம், அஷ்ரப் அஸீர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்;ச்சியை கிண்ணியா அமீர் அலி, ஷப்னா அன்சார் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X