Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச கலை மன்றங்கள் இணைந்து வழங்கிய கலைச்சங்கமம் நிகழ்வு வியாழக்கிழமை வவுணதீவில் இடம்பெற்றது.
இதன்போது கலைக்கழகங்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவர்களுக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து கலாசார திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் ரீ.மலர்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 minute ago
11 minute ago
20 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
11 minute ago
20 minute ago
47 minute ago